Tuesday, September 25, 2012

பகுத்தறிவாளர்களின் கடவுள்!


ஓரிறையின் நற்பெயரால்!

தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.
"கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது. ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்குப் பலர் ஆளாகின்றனர். ஆக, கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது. ஆக, இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்குப் பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திகச் சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.
நாத்திகம்
பொதுவாக ஒருவரின் நாத்திகச் சிந்தனைக்கு அடிப்படைக் காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மைச் சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும் அனாச்சாரங்களும் அறிவிற்குப் பொருந்தாத மூடப் பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூகப் புறக்கணிப்பும்தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கியக் காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்ஆன் மற்றும் ஹதிஸ்களுக்குத் தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து, கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள். எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ்..!

இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் ... கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்குச் சான்று தரப்படுகிறது. மாறாக, நேரடியாக கடவுள் இல்லையென மறுக்கத் தெளிவான காரணம் இல்லை.

"பரிணாமக் கொள்கை" அறிவியல் ரீதியாகக் கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாகக் கொண்டாலும் அதுவும் பயனற்றுதான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும்(?)கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தைப் பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடுதான் ஆய்வைத் தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.

ஆக, அறிவியல் ரீதியாகக் கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது. சுருங்கக்கூறினால், "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஓர் உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்கத் தர்க்கரீதியான வழிகளைத்தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவுப் பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை. அதேநேரத்தில் பொதுவில் அறுதியிட்டுக் கூறும் தம் வாதத்தை மெய்ப்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும். இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.

இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வைப் பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப் பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்குக் குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.

"என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை ஒருவர் மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்குப் பேனாவைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். பேனாவைப் பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றிக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என அவரால் கூற இயலும்" என அவர் கூறினார்.

மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இரு பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது. மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படித்தான் மேற்கண்ட நாத்திகச் சிந்தனை, கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தைக் கையாளுகிறது.

ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
என் கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு அதைப் பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை ஒருவர் மறுப்பதாக இருந்தால் பேனாவைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களின் வரைவிலக்கணம் குறித்துத் தெரிந்திருந்தாலும் இக்கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம்.

ஆக, இந்த உதாரணத்தை மேற்கோளாகக் கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும்போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்குக் கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.

மிகத் தெளிவாக, எளிதாக,

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் என்பவன் ஒருவனே (112:1).
அல்லாஹ் 
(எவரிடத்தும்) தேவையற்றவன் (112:2).
அவன் 
(எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை (112:3).
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை (112:4).


இப்படி குர்ஆனில் கடவுளுக்கு  இஸ்லாம் வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதேநேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்குப் பொருந்தும்படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இருக்கக்கூடாது.

கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்தி, இஃது உண்மையானது என குர்ஆன் கூறும் போது, மேற்கண்ட கோட்பாட்டைப் பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனையாளர்கள் தரவேண்டும். ஆனால் இன்றுவரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும்கூட. 


ஏனெனில், கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் எனக் கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும் நாத்திகம், கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது? ஏன் கடவுளாக இருக்க முடியாது? என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உருவான முதல்நாளே இயற்றி இருக்கவேண்டுமல்லவா? இதுவரைக்கும் அப்படி ஒரு வரைவிலக்கணத்தை நாத்திகம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலிக் கடவுளர்களைத்தான் தங்கள் மறுப்புக்குரிய கடவுளர்களாக நாத்திகர்கள் இனங்காட்ட முடியும்.

போலிக் கடவுளர்களை மறுப்பதற்குப் பெயர்தான் நாத்திகச் சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகையப் போலிக் கடவுளர்களை இல்லை என்றுதான் சொல்வோம்.

பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களைச் சொல்ல வேண்டாம். வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று - அதுவும் மதங்கள் சமைத்த போலிக் கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப் படுத்தட்டும். உங்களின் அறிவுச் சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திகச் சகோதரங்களே!

முஹம்மது (ஸல்): விமர்சனங்களை வென்றவர்


கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்தமுஹம்மது (ஸல்அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனிதவரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டதுஇந்த உலகில்மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்கமுடியாதது.
 
சமயம்சமூகம்அரசியல்பொருளாதாரம்கலாச்சாரம்வரலாறுஅறிவியல்,மொழிதத்துவம்இலக்கணம்இலக்கியம்வாழ்வியல்உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறதுஇன்றும்நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாகஇடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கானஅவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும்மேற்கோள் காட்டப்படுபடுகின்றனசட்டம்நீதிநிர்வாகம் மற்றும்பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும்அந்தப் பாலைவனச்செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
 
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான்காரணமாக இருக்கப் போகிறது என  நா மன்றம் எச்சரித்துள்ளதுநீர் பங்கீடுமற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக்கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்அறிவுரைகள்அல்லதுகருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது.இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில்பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழுஅறிமுகமாகிவிடாதுதான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும்வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார்,அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும்அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற்கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
 
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்றதத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக்கொண்டிருக்கின்றன.
 
முஹம்மது (ஸல்அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்றதலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது.இயேசுபுத்தர்ஆதி சங்கரர் விவேகானந்தர்காந்திபோன்ற பலரும் அனைத்துமக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லைஆனால்இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களைபின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின்சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும்முஹம்மது நபி (ஸல்)பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள்அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
 
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர்ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார்அவன் அதை தடுக்காமலும் திருப்பிதாக்காலும் நிற்கிறான்ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர்என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது(ஸல்கூறியுள்ளார்நான் அந்தபழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
 
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவிநடந்து கொண்டிருக்கிறாள்ஏன் இப்படி என்று கேட்டால்இதுமுஹம்மது(ஸல்நபியின் உத்தரவு என்கிறாள்.
 
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும்என்று சிறுவன் அடம் பிடிக்கிறான்அதை எடுத்துப் பார்த்த தந்தை இதுஹலால் அல்ல என்கிறார்சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறதுஎன்ன என்றுவிசாரித்தால் முஹம்மது (ஸல்என்று பெயர் சொல்லப்படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன்தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான்காவலர்கள்அடித்து உதைக்கிறார்கள்அவன் பாங்கை நிறுத்தவில்லைஅவனைசிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை.சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான்கிருக்கன்என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்எதற்காக இப்படி என்றுகேட்டால் முஹம்மது (ஸல்கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்றுஅவன் பதிலளிக்கிறான்.
 
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றிவாழும் ஒரு சமுதாயம்வெட்கத்தை விலை பேசி விற்று விட்டடென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும்ஒரு சமுதாயம்பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிறஒரு சமுதாயம்இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும்முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக்கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும்தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம்நேட்டோ நாடுகளின்ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிறஒரு சமுதாயம்சர்வதேச அளவில்கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டிஉயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது(ஸல்என்றபெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக்கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியதுஅறிவாளிகளின் கடமையாகும்.
 
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்தியவெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும்.அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர்விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும்விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்துவிவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
 
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணடநிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறுஉமர் ஒருஉதாரணம் போதாதாஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது(ஸல்)என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாகமாறிவிடவில்லையாஎதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கேபலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது(ஸல்நபியின்தனிச்சிறப்பு.
 
முஹம்மது நபி (ஸல்தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான்.அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள்என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள்ஆயினும்முஹம்மது நபி (ஸ்ல்அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரைதரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.